|

சிராத்த திதி

சிரார்த்த திதி என்பது மறைந்த நமது முன்னோர்களுக்கும் மூதாதையர்களுக்கும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை செய்வதற்கான திதியாகும். இது திதி நிர்ணய விதிப்படி நிர்ணயிக்கப்படுவது. மறைந்த பெற்றோரின் சிரார்த்த திதியானது அவர்கள் இறந்த ஆங்கிலத் தேதிக்கு சம்பந்தப்பட்டதல்ல. நமது இந்து ஆகம முறைப்படி தமிழ் தேதிகளும் திதியும் சம்பந்தப்பட்டதாகும். சௌரமான மாதங்களின்படி தமிழ்நாடு, கேரளாவிலும் சாந்திரமான மாதங்களின்படி ஆந்திரா, கர்நாடகாவிலும் (தெலுங்கு, கன்னடர்கள்) கடைபிடிக்கப்படுகின்றன. எனவே அவரவர் குல வழக்கப்படி சிரார்த்தங்களை கடைபிடிக்க வேண்டியது. சௌரமானக்காரர்கள் அவர்கள் இறந்த தேதி மணிக்கு தமிழ் சௌரமான மாதப்படி வளர்பிறையா அல்லது தேய்பிறையா, அதில் என்ன திதி என்று பார்க்க வேண்டும். அதுவே அவரது சிரார்த்த திதியாகும். அந்த திதி வருடா வருடம் அதே தமிழ் மாதப்படி எப்போது வருகிறதோ அன்றுதான் அவர்களுக்கான சிரார்த்தங்களை செய்ய வேண்டும். சாந்திரமானக்காரர்கள் சாந்திரமான மாதப்படி சுத்த அல்லது பகுள திதி என்ன என்று பார்த்து அந்த சாந்திரமான மாதப்படி எப்போது வருகிறதோ அப்போது செய்ய வேண்டும். அதிக சாந்திரமான மாதங்கள் சிரார்த்தம் செய்வதற்கல்ல. நிஜ சாந்திரமான மாதங்களில் மட்டும் செய்ய வேண்டும். இப்படி வருடா வருடம் செய்யும் சிரார்த்த திதிகளோடு மட்டுமல்லாது ஒவ்வொரு மாதமும் வருகிற அமாவாசை அன்று தர்பணம் செய்வது சிறப்பு. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய பட்ச அமாவாசை ஆகியவற்றிலாவது அவசியம் சிரார்த்தங்களை செய்யவேண்டும். சங்கராந்தி 12, அமாவாசை 12, வைதிருதி 12, வியாதீபாதம் 12, மனு 14, யுகாதி 4, மகாளயம் 16, அஷ்டகா 1, அன்வஷ்டகா 1, திஸ்ரோஷ்டகா 12 ஆக மொத்தம் 96. இவை ஷண்ணவதி சிரார்த்தம் எனப்படும். இந்த 96 தினங்களிலும் சிரார்த்தங்கள் செய்வது மேலும் சிறப்பு. அந்த சிரார்த்த தினங்கள் பஞ்சாங்கத்தில் விரதாதி விஷேசங்கள் நிர்ணய கட்டத்தில் காட்டப்பட்டுள்ளது.

Similar Posts

  • |

    பஞ்சாங்க அடிப்படைகள்

    பஞ்சாங்கம்கண்ணன் பஞ்சாங்கம் மலேசிய ஸ்டாண்டர்டு நேரப்படி கோலாலம்பூ¡¢ன் அக்ஷராம்சம், ரேகாம்சத்திற்கும் சூரிய உதயத்திற்கும் தக்கப்படி கணிக்கப்பட்டுள்ளது. அதனால் திதி, நட்சத்திரங்கள் முடியும் நேரங்கள், அவைகளை பின்பற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ள முகூர்த்த நாட்கள், பண்டிகைகள், விரதங்கள், விஷேசங்கள், சிரார்த்த திதி, அமாவாசை தர்ப்பணங்கள், திதித்வயம், திரிதினஸ்பிருக், அவமாகம் ஆகியவை இந்திய பஞ்சாங்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபடும். ஆனால் மலேசிய நேரப்படி இதுவே சா¢யானது. கண்ணன் பஞ்சாங்கம் சௌரமானப்படி தயா¡¢க்கப்பட்டது. சாந்திரமானக்காரர்கள் பயன்படுத்த வசதியாக சாந்திரமான மாதங்களும் பஞ்சாங்கத்தில் உள்ளது. சுக்லபட்சத்தை…

  • |

    வாஸ்து-மனையடி சாஸ்திரம்

    வாஸ்து என்பது நாம் வாழும் இடம் பற்றிய தத்துவம். புதிதாக வீடு கட்டும் போது தான் வாஸ்துவை முழுமையாக பின்பற்ற முடியும். வீடு, அலுவலகம், வியாபார ஸ்தலம், கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகளை கண்டுபிடித்து அறைகளை, பொருட்களை சற்று மாற்றியும் சில பா¢காரங்களை செய்தும் கொள்ளலாம். பிறரால் கட்டப்பட்டு விற்கப்படுகிற வீடுகளை வாங்குவதற்கு முன்பே வாஸ்து நிபுணரை அழைத்து சென்றால் எந்த வriசையில், எந்த தலை வாசலுடன் எப்படிப்பட்ட அமைப்புள்ள வீட்டை வாங்கினால் நல்லது என…

  • தகவல்கள்

    தைப்பொங்கல்: தமிழக உழவர்களின் திருநாளே தைப்பொங்கல். மகர சங்கராந்தி என்கிற தை மாதம் பிறக்கும் நேரத்திற்கும் தைப்பொங்கலிடும் நேரத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஜய வருட மகர சங்கராந்தி நள்ளிரவு 1.06க்கு நடக்கிறது. மகர சங்கராந்தியானது மலேசிய நேரப்படி இரவு எட்டு மணியாக கூட இருக்கலாம். அதனால் தைமாதம் முதல் தேதி என்றைக்கு குறிப்பிடப்பட்டு உள்ளதோ அன்று காலையில் பொங்கலிட்டு (சூ¡¢ய உதயத்திற்கு மேல் – மதியத்திற்குள், நல்ல நேரத்தில்) சூ¡¢யனுக்கு படைத்து வழிபட வேண்டும். அதை விடுத்து…

  • |

    எண்கணிதம்

    எண்கணிதம் என்பது கிரகங்கள், எண்கள், ஆங்கில எழுத்துக்கள் சம்பந்தப்பட்ட ஒரு தத்துவம். எண்கணிதத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு எண் உண்டு. அந்த எண்களுக்கு எழுத்துக்கள் உள்ளன. ஜோதிடப்படி இயற்கையிலேயே நல்ல கிரங்களான குரு, சுக்கிரன், புதன் ஆகியவைகளின் எண்கள் முறையே 3, 6, 5 ஆகியவை நல்ல எண்கள். சூ¡¢யன் தலைமை கிரகம் ஆதலால் 1 ஆம் எண் தலைமைத்துவமும் சில கெடுதல்களும் உடையது. சந்திரன் வளர்ந்து தேயக்கூடியது ஆகையால் 2 ஆம் எண். ஏற்றம் இறக்கம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *