|

எண்கணிதம்

எண்கணிதம் என்பது கிரகங்கள், எண்கள், ஆங்கில எழுத்துக்கள் சம்பந்தப்பட்ட ஒரு தத்துவம். எண்கணிதத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு எண் உண்டு. அந்த எண்களுக்கு எழுத்துக்கள் உள்ளன. ஜோதிடப்படி இயற்கையிலேயே நல்ல கிரங்களான குரு, சுக்கிரன், புதன் ஆகியவைகளின் எண்கள் முறையே 3, 6, 5 ஆகியவை நல்ல எண்கள். சூ¡¢யன் தலைமை கிரகம் ஆதலால் 1 ஆம் எண் தலைமைத்துவமும் சில கெடுதல்களும் உடையது. சந்திரன் வளர்ந்து தேயக்கூடியது ஆகையால் 2 ஆம் எண். ஏற்றம் இறக்கம் கொண்டது. கெட்ட கிரகங்களான சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகியவற்றின் எண்களான 8, 4, 7, 9 ஆகியவை பொதுவாக நல்ல எண்கள் அல்ல. ஆக நல்ல எண்களில் பெயரை அமைத்துக் கொள்வதும் அந்த தேதிகளில் எதையும் செய்வதும் முன்னேற்றம் தரும்.

உடல் எண் அல்லது பிறவி எண் என்பது ஒருவரது பிறந்த தேதியில் உள்ள எண்களை மட்டும் கூட்டி வருவது. உயிர் எண் அல்லது விதி எண் என்பது அவரது பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றில் உள்ள எண்கள் அனைத்தையும் கூட்டி வருவது. பெயர் எண் என்பது பெயா¢ல் உள்ள எழுத்துக்களுக்கான எண்களை கூட்டி வருவது.
GANESAN என்பவரது பிறந்த தேதி 24.10.2013.
தேதியின் கூடுதல் 2 + 4 = 6 என்பது அவரது உடல் எண்.

2 + 4 + 1 + 0 + 2 + 0 + 1 + 3 = 13 அதை மீண்டும் கூட்டனால் 1 + 3 = 4 என்பது அவரது உயிர் எண்.
GANESAN இதில் உள்ள எழுத்துக்களின் எண்களை கூட்டினால் 3 + 1 + 5 + 5 + 3 + 1 + 5 = 23 அதை மீண்டும் கூட்ட 2 + 3 = 5 என வரும். இதுவே அவரது பெயர் எண்.

6 என்பது சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள எண், 4 என்பது ராகுவின் எண். சிலருக்கு அவரது உடல் எண், உயிர் எண்ணே பெயர் வைக்க யோகமான எண்ணாக அமையும். சிலருக்கு வேறு கிரகங்களின் எண்கள் யோகமாக அமையும். ஆகையால் வேறுவேறு உடல் எண்ணிலும் உயிர் எண்ணிலும் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க யோகமான எண்கள், கெடுதலான ஆகாத எண்கள் தரப்பட்டுள்ளது.
bgaஈ it¡f nahfkhd v©: ஒருவரது பிறந்த தேதியை கூட்டி உடல் எண்ணும், எல்லாவற்றையும் சேர்த்து கூட்டி உயிர் எண்ணும் பார்த்து அவைகளுக்கு யோகமான பெயர் எண்கள் எவை என அட்டவணையில் பார்க்க வேண்டும்.
பிறந்த தேதி 23.06.2013
உடல் எண்: 2 + 3 = 5. இது புதனின் எண்.
உயிர் என்: 2 + 3 + 0 + 6 + 2+ 0 + 1 + 3 = 17 = 1 + 7 = 8

இது சனியின் எண். ஆகவே இவர் புதன் மற்றும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர். இவருக்கு பெயர் எழுத்துக்களின் கூடுதல் புதனின் எண்ணான 5 ல் வரும்படி பெயர் வைக்கலாம். சனியின் எண்ணான 8 ல் பெயர் வைப்பது நல்லதல்ல. சுக்கிரனின் எண்ணான 6 லும் பெயர் வைக்கலாம். 5 எனும் போது கூட்டினால் 5 வரக்கூடிய 14, 23, 32, 41, 50, 59, 77 என்ற எண்கள் வரும்படி பெயர் வைக்கலாம். அல்லது கூட்டுத்தொகை 6 வரக்கூடிய 15, 24, 33, 42, 51, 60, 69 என்ற எண்கள் வரும்படியும் பெயர் வைக்கலாம்.

fhஈ, thfd§f௲ th§f:
கார், வாகனங்கள் வாங்கும் போது வாகன எண்ணுடன் அதன் எழுத்துக்களின் எண்களையும் சேர்த்து கூட்ட வேண்டும்.
JLW 5657 = 1 + 3 + 6 + 5 + 6 + 5 + 7 = 33 = 3 + 3 = 6

ரூL, fil, mYtyfஅ
வீடு வாங்கும்போது தெரு எண் முக்கியமல்ல. வா¢சையான வீடுகலாயின் வீட்டின் எண் மட்டும் போதும்.
LORONG 12, DOOR NO: 23, வீட்டின் எண் மட்டும் 2 + 3 = 5
அடுக்கு மாடி வீடாக இருந்தால் கட்டிடத்தின் (BLOCK) எண் முக்கியமல்ல. மாடியின் எண்ணும் (FLOOR) கதவு எண்ணும் (DOOR NO, UNIT NO) சேர்த்து கூட்ட வேண்டும். ஏனெனில் சில இடங்களில் நம் வீட்டின் கதவு எண்ணும் மேல் மாடி, கீழ் மாடி வீடுகளின் கதவு எண்ணும் ஒன்றாகவே இருக்கும். ஆனால் மாடி எண் மாறுவதால் கூட்டு எண் மாறும்.
Blk 24 #12-29, அதாவது 12 வது மாடி, 29 ஆம் எண் வீடு. 1 + 2 + 2 + 9 = 14 = 1+ 4 = 5.

Similar Posts

  • |

    பஞ்சாங்க அடிப்படைகள்

    பஞ்சாங்கம்கண்ணன் பஞ்சாங்கம் மலேசிய ஸ்டாண்டர்டு நேரப்படி கோலாலம்பூ¡¢ன் அக்ஷராம்சம், ரேகாம்சத்திற்கும் சூரிய உதயத்திற்கும் தக்கப்படி கணிக்கப்பட்டுள்ளது. அதனால் திதி, நட்சத்திரங்கள் முடியும் நேரங்கள், அவைகளை பின்பற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ள முகூர்த்த நாட்கள், பண்டிகைகள், விரதங்கள், விஷேசங்கள், சிரார்த்த திதி, அமாவாசை தர்ப்பணங்கள், திதித்வயம், திரிதினஸ்பிருக், அவமாகம் ஆகியவை இந்திய பஞ்சாங்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபடும். ஆனால் மலேசிய நேரப்படி இதுவே சா¢யானது. கண்ணன் பஞ்சாங்கம் சௌரமானப்படி தயா¡¢க்கப்பட்டது. சாந்திரமானக்காரர்கள் பயன்படுத்த வசதியாக சாந்திரமான மாதங்களும் பஞ்சாங்கத்தில் உள்ளது. சுக்லபட்சத்தை…

  • |

    பஞ்சாங்க விஷயங்கள்

    மலமாதம்: ஒரு சௌரமான மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி வந்தால் அந்த மாதம் மலமாதம் என்று அழைக்கப்படுகிறது. மல மாதங்களில் சுபகாரியங்களை தவிர்க்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. ஆனால் வஸந்த ருதுவான சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் இரண்டு அமாவாசையோ இரண்டு பௌர்ணமியோ வந்தால் அம்மாதங்களுக்கு மலமாத தோஷம் கிடையாது. திரிதினஸ்ருக்: ஒரு திதியோ, நட்சத்திரமோ, யோகமோ மூன்று நாட்களில் சம்பந்தப் பட்டு இருப்பது திரிதின ஸ்புருக். ஒரே நாளில் மூன்று திதிகள்,…

  • |

    பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம்

    பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம்: ஒரு நாள் 30 முகூர்த்தங்கள் கொண்டது. பகல் 15, இரவு 15 முகூர்த்தங்கள். ஒரு முகூர்த்தம் என்பது 2 நாழிகை அதாவது 48 நிமிடங்கள். 29 வது முகூர்த்தத்திற்கு பிரம்ம முகூர்த்தம் என பெயர். அது சூ¡¢ய உதயத்திற்கு 1 மணி 36 நிடங்களுக்கு முன் ஆரம்பித்து சூரிய உதயத்திற்கு 48 நிமிடம் முன்பாக முடியும். சூரிய உதயம் காலை 7.00 மணி எனில் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை…

  • |

    வாஸ்து-மனையடி சாஸ்திரம்

    வாஸ்து என்பது நாம் வாழும் இடம் பற்றிய தத்துவம். புதிதாக வீடு கட்டும் போது தான் வாஸ்துவை முழுமையாக பின்பற்ற முடியும். வீடு, அலுவலகம், வியாபார ஸ்தலம், கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகளை கண்டுபிடித்து அறைகளை, பொருட்களை சற்று மாற்றியும் சில பா¢காரங்களை செய்தும் கொள்ளலாம். பிறரால் கட்டப்பட்டு விற்கப்படுகிற வீடுகளை வாங்குவதற்கு முன்பே வாஸ்து நிபுணரை அழைத்து சென்றால் எந்த வriசையில், எந்த தலை வாசலுடன் எப்படிப்பட்ட அமைப்புள்ள வீட்டை வாங்கினால் நல்லது என…

  • |

    சிராத்த திதி

    சிரார்த்த திதி என்பது மறைந்த நமது முன்னோர்களுக்கும் மூதாதையர்களுக்கும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை செய்வதற்கான திதியாகும். இது திதி நிர்ணய விதிப்படி நிர்ணயிக்கப்படுவது. மறைந்த பெற்றோரின் சிரார்த்த திதியானது அவர்கள் இறந்த ஆங்கிலத் தேதிக்கு சம்பந்தப்பட்டதல்ல. நமது இந்து ஆகம முறைப்படி தமிழ் தேதிகளும் திதியும் சம்பந்தப்பட்டதாகும். சௌரமான மாதங்களின்படி தமிழ்நாடு, கேரளாவிலும் சாந்திரமான மாதங்களின்படி ஆந்திரா, கர்நாடகாவிலும் (தெலுங்கு, கன்னடர்கள்) கடைபிடிக்கப்படுகின்றன. எனவே அவரவர் குல வழக்கப்படி சிரார்த்தங்களை கடைபிடிக்க வேண்டியது. சௌரமானக்காரர்கள் அவர்கள் இறந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *